தமிழ் நண்பன்

Friday, April 17, 2009

en kavithai

நின்
அருகாமையில் வேகமாகவும்
தூரத்தில் மெதுவாகவும்
சுழல்வதுமாய் உலகம்;
உன்னால்
பைத்தியமாகிவிட்டது அதுவும்!

*

உன்னில் பாதியாய்
என்னில் மீதியாய்
நம்மில்
முழுதும் காதல்!

*

காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

*

வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!

*

உன்
கண்மையைக் கொடு;
மைப்போட்டு பார்க்கலாம்
உன்னில் தொலைந்த
என்னிதயத்தை!

en kathl kavithikal from agathiyan

உன் தோழியின் கல்யாணவீட்டில் தாலிகட்ட உதவிசெய்த
உன்னைப் பார்த்தபின் தான் எனக்கும் ஆசை வந்தது
தாலிகட்டி கல்யாணம் செய்ய

*

உன்னோடு கூடவர ஆசையின்றி
விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு
கூடவர என் ஆசையை வளர்த்தது

*

நான் முதல்த் தடவை பயணித்த
விமானத்தில்த்தான் உன் நினைவுகளை
தரையிறக்கிவிட்டு முதன்முதல்
உன்னை கனவு காண ஆரம்பித்தேன்

*

வருசையில் நின்று வாங்கப் போன
மருந்துக்கடையில்தான் வாங்கி வந்தேன்
மருந்தே இல்லாத காதல் நோயை

*

உன்னை பலமுறை சந்தித்த போதும்
என்னால் உன் மெளனத்தை கலைக்க
முடியாமல்ப் போன போதுதான்
எனக்கு உதவிசெய்து உறுதிப்படுத்தியது
உன் கைபேசி நீ ஊமையானவள் அல்ல என்று

*

தன் பெயரை பிழையாக எழுதிக் கொண்டிருந்த
சிறுமியிடம் அழகாய் எழுத கற்றுக் கொடுத்தேன்
என் காதலியின் பெயரும் அது என்பதால்

kathli

சத்தமே எழுப்பாமல்
நீ அருகில் செல்லும்போதெல்லாம்
பட்டுப்பூச்சி பறந்து விடுகிறது

மறுபடியும் தவற விட்டதை
நினைத்து நீ முகம் சுளிக்கிறாய்
தோல்வியிலும் நீ எத்தனை அழகு

தொடர்ந்து முயற்சி செய் என்கிறேன்!
பட்டாம்பூச்சிகள் பறந்து விடும்
என்ற நம்பிக்கையில்!




சத்தமே எழுப்பாமல்
நீ அருகில் செல்லும்போதெல்லாம்
பட்டுப்பூச்சி பறந்து விடுகிறது

மறுபடியும் தவற விட்டதை
நினைத்து நீ முகம் சுளிக்கிறாய்
தோல்வியிலும் நீ எத்தனை அழகு

தொடர்ந்து முயற்சி செய் என்கிறேன்!
பட்டாம்பூச்சிகள் பறந்து விடும்
என்ற நம்பிக்கையில்!


இரவில் தூங்கப் போகும்போது
தோடுகளையும், வளையல்களையும்
கழற்றி வைப்பதை போல்
உன் சிறகுகளை
எங்கே கழற்றி வைப்பாய்?

muthham

முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?

*

உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!

*

உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.

*

பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!

*

நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!

kaathal

நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!

*

இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.

*

யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்.

*

உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்
எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட
சிறகடித்து தவிக்கும் இமைகள்!

*

தனியே நீ முணுமுணுக்கும்
இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்
இனிமை இழப்பதேன்?

kaathal

நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!

*

இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!

*

குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!

*

உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

*

எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!

kathal sei

காதல் எப்போதுமே
புரியாதவைகளின் புதையல் தான்.
கேள்விகளே
விடைகளாவது இங்கு மட்டும் தான்.

தெரியவில்லை என்ற
பதில் தான்
அதிகமாய் இங்கே பரிமாறப்படும்.

நடக்குமா என்னும்
வினாக்களுக்கும்,
முடியுமா எனும்
முகப்பாவனைகளுமே
காதலின் வழியெங்கும்.

ஒவ்வோர் மனசுக்கும்
தன் காதல் மட்டுமே
தெய்வீகம்,
மற்றவை எல்லாம்
மோகத்தின் வேஷங்கள்.

பார்க்குமிடமெல்லாம்
பிரமிடுகள் எழுந்தாலும்,
எங்கேனும் முளைக்கும்
ஓர் முளையை நம்பியே
நடக்கும்
இந்த பரிசுத்த ஆடுகள்.

கவிதைகளின் முதல் தளம்
பெரும்பாலும்
காதலின் அடித்தளம் தான்.

பிரபஞ்சம் சுருங்கினாலும்
தன் காதல் மட்டும்
தீர்க்கக் கோடாய் மாறியேனும்
தப்பிக்குமெனும்
தீர்க்கமான நம்பிக்கை,
காதல் கரைகளில் கிளிஞ்சல்களாகும்.

இது,
உதடுகள் திறந்து வைத்து
உணர்வுகளில்
பூட்டிட்டுக் கொள்ளும்
உற்சாக ஊற்று.

புலன்களுக்குச்
சொடுக்கெடுக்கும் பூக்கூட்டம்,
காதல்,
மௌனங்கள்
தினம் நடத்தும் பொதுக்கூட்டம்.

காதலியுங்கள்,
காதல்
நாட்டிய மலர்களின் நந்தவனம்.
தாண்டி வந்த திருப்தி
தோல்வியிலும் தொடரும்.

kathaliye

காதலியே
சிந்தித்துப் பார்
நீ காதலியானது உனக்கே நியாயமாகத் தோன்றுகிறதா
இப்படிக் கவிதை எழுதிக் காவியம்
காண்பதில் பயன் என்ன உனக்கு
பாடுபட்டு படிக்கிறாய் பாடங்களையா - அல்ல
படிவங்களை [கடிதம்]
பாழாய்ப் போன நித்திரை நடுச்சாமம்
வருவதில்லையா - ஏன்
அவன் உன் நினைவுகளைக்
கலைத்துக் கொண்டே இருக்கின்றானா.

காதலியே
சிந்தித்துப் பார்
சிதையாமல் கிடந்த உன் இதயத்தை
சிதைத்த அவன் இப்போ
“சிதைந்து போன ஓவியமே” எனக் குற்றம் சாட்டுகின்றானா
இது தான் அறியா வயதில் தெரியாமல் வருவது
அறிந்த பின்னும் விட முடியாமல் இருப்பது.

காதலியே
சிந்தித்துப் பார்
சின்ன வயதில்
துள்ளித் திரிய வேண்டிய வயதில்
இப்படி சிணிங்கித் திரிவது உனக்கே
நியாயமாகத் தோன்றுகிறதா
விளங்காமல் விபரீதத்தில் காலை வைத்துவிட்டாய் காதலியே
உன் எதிர் காலத்தில் புதைந்து போகாமல்
இப்போதே சேற்றிலிருந்து காலை சிதையாமல்
எடுத்துக் கொள்.

காதலியே
சிந்தித்துப் பார்
உனக்காக உன் பெற்றோர் பட்ட
கடன்களை - இல்லை இல்லை துன்பங்களைச்
சற்றே நினைத்துப் பார்
சிறு வயதிலிருந்து உன்னை முழுமையாக்க
அவர்கள் பட்ட துயரங்களை
நீ துடைக்க வேண்டாமா
பெற்றவர் சேர்த்த சொத்துக்கள் உன்னைச் சாரும்போது
அவர்கள் பட்ட கடன்களும் உன்னைச் சாருமடி பெண்ணே.

காதலியே
சிந்தித்துப் பார்
நீ உனது தந்தைக்கு உதவி செய்ய வேண்டிய நேரத்தில்
உவத்திரமல்லவா செய்யப் போகிறாய்
“இவன் என் காதலன்; பதினாறு வயதில்
என் பக்கம் வந்தவன்; என்ன செய்தவன்;
இப்போதென்ன செய்கிறான்; இனி என்ன
செய்யப் போகிறான் - எனக்கே தெரியாது” என்று
அறிமுகம் செய்யப் போகிறாயா
இது எல்லாம் உனக்குத் தேவைதானா
இன்னும் பத்து வருடங்களுக்கு என்னென்ன நடக்குமோ
உன்னால் கட்டுப் படுத்த முடியாது
ஏன் அவன் “மீண்டும்” மனம் மாறலாம்
அப்போது உனது பெற்றோருக்கு
நீ என்ன சொல்வாய்.

காதலியே
சிந்தித்துப் பார்
சிதைந்து போகக் கூடிய உனது
வருங்கால ஓவியத்தை
நீதான் மீண்டும் வரையவேண்டி வரலாம்
உனக்குள் ஓர் கேள்வியை எழுப்பு
இவன் - காதலன் - இப்போது தேவைதானா?
இவனால் எதிர்காலத்தில்
உனக்கென்ன பயன் - அல்லது
காதலனால் வரப்போகும்
இன்னல்களை சற்றே சிந்தித்துப் பார்
பத்து வருடத்திற்குள்
என்னவென்றாலும் மாறலாம்
அத்தனைக்கும் நீயே தான் பொறுப்பு - இப்போது
முடிவை மாற்றாவிட்டால்.

காதலியே
சிந்தித்துப் பார்
காதல்; காய் கனியாக முன்பே
வெம்பி விழும் உறவைப் போன்றது
இன்று வரும் நாளை போகும்
எதிர் நாள் “மீண்டும்” வரலாம் - ஆனால்
உனது எதிர் காலம்
சென்றால் வராது
கழிந்தன கழிந்தவை தான்
இனிப் புதியன புக வழிவகுப்பாயாக.

காதலியே
சிந்தித்துப் பார்
வாழ்க்கையே சோகமென சோம்பி விடாமல்
புதுத் தென்புடன் ஒரு புதிய பாதையைத் தொடங்கு
உனக்குள் படுத்துறங்கும் அந்தச் சோகப் பெண்ணைச்
சிதைத்து விட்டு ஒரு “புதிய காதலி”யாக - இல்லை இல்லை
ஒரு பாரதி கண்ட புதுமைப்
பெண்ணாக உருவெடுத்து வா
நீ செய்ய வேண்டியவைகள் ஏராளம் உண்டு
செய்து முடிந்தவற்றைப் பற்றிக் கவலைப்படாதே
இனி அப்படி நடக்கவும் விடாதே.

kaathal vanthal

உன் மேல்
கவிதை எழுதினேன்
காதல் வந்ததால்
காதல் வந்ததால்
உன் சொல் கூட‌
கவிதை ஆனதே.
அடடா,
இதையும் ஏற்கனவே எழுதி விட்டார்களே!

kathal thuppakki

உனது வார்த்தை ஒவ்வொன்றும்
என் இதயம் துளைக்கிறதே - ஏன்
நீ காதல் ஆயுதத்தால் சுட்டாயோ?

kathal kelvi

மனம்
என் மனம்
எனக்குச் சொன்னது
உன்னில் உன்னைவிட அவள் அன்பு வைத்திருக்கிறாள் என்று
எண்ணிப் பார்த்தேன், புரியவில்லை
அதுதான் உன்னிடத்திலேயே கேட்டுவிட்டேன் - என்
காதல் கேள்வியை