தமிழ் நண்பன்

Sunday, November 8, 2009

காதல் கவிதை

காட்ரோடு
கலந்துவிட்ட‌
பூக்கலின்
வாசமும்
என்னொடு
க‌லந்துவிட்ட‌
உன் அன்பின்
நெசமும்
ஒரு நாலும்
பிரிய‌து

குட்டி கவிதைகள்

பொங்கல் வைத்து
படையலிட வருகிறாய்;
அய்யனார் கையில்
பூ!

#

உன் பார்வை பற்றவைத்தது;
உருகி உருகி
எரிகிறது உயிர்!

#

என் கண்ணீர்
துளிகளால்;
உனக்கு வைரமாலை!

#

உன் அறை
உன் பிம்பம்
என் கோவில்
என் சாமி!

#

மூங்கில் காடு புகும்
காற்று அழுது திரும்புகிறது;
உன் நினைவில் அரற்றும்
எனைப் போலவே!

என் இனிய ithayam

திருமணம் ஆனபிறகு
உனக்கு என் ஞாபகம் வருமா
எனக் கேட்கிறாய்.
நான் உன்னையே
திருமணம் செய்துகொண்டுவிட்டால்?

2

அழகான பெண்களைப் பார்க்கும்போது
உன் ஞாபகம் வருகிறது.
உன்னைப் பார்க்கும்போது
அழகான பெண்களின் ஞாபகம் வருகிறது.

3

வாழ்க்கையில்
ஒரு புத்தகமாவது
எழுதிவிடவேண்டும்
உன்னைப் பற்றி.

தொலைவினால்
ஆனது
நம் பிரிவு.

2

நான்
இல்லாமல்
வாழக் கற்றுக்கொள்.

3

நேற்று நீ என்னுதட்டில் பதித்த காயம்
கண்ணாடியில் தனைக் கண்டு சிவக்கிறது
என்னென்னவோ
சொல்கிறதுன்1 பார்வை.
அட வேண்டாமடி2,
வாயைத் திற
கேட்கிறேன் உன் குரலையாவது3.

2

எங்கோ போகும் வழியில்
திடீரென எதிர்ப்படும் உன்னை
எதிர்பாராமல் திகைக்கிறேன்
ஆறாம் வாய்ப்பாடு மறந்தவனாய்.

3

நான் மட்டும் இல்லையென்றால்
எதைப் பற்றிக் கவிதை எழுதுவாய் என்கிறாய்.
யாரைப் பற்றி என்று கேள்.

* * *