தமிழ் நண்பன்

Thursday, October 29, 2009

காதல் (திங்)கள்

நீ நினைக்கிறேன்.

நான் பேசுகிறாய்.

நமக்குள் காதல் வராமல்

என்ன செய்யும்?



*



பூக்களற்ற தீவுகளுக்கு

மணம்வீசப் பயணிக்கிறது.

உன் கூந்தலிலிருந்து

பிரிந்த இழையொன்று.



*



நேரில் கோபித்துக்கொண்டு

கனவில் வந்து கொஞ்சும்

மக்கு நீ!



*



குடையின்றி நீ வருகையில்

வெயிலுக்கும் மழைக்கும் சண்டை!



*



நீ நிலாச்சோறுண்ணும்

பௌர்ணமி இரவுகளில்

காதல் கள்ளுண்ணும்

நிலா!

No comments:

Post a Comment