கடற்கரையும் கவிதைகளும் மட்டும் காதல் அல்ல
காலம் கடந்தும் மோகம் இருந்தால் அதுவே காதல்
ஊடல்களும் ஓட்டங்களும் மட்டும் காதல் அல்ல
ஒளி இழந்த பின்னும் கண் சிமிட்டும் விழியில் உண்டு
காதல்கட்டில் சுகங்களும் ,தொட்டில் துன்பங்களும் மட்டும் காதல் அல்ல
கடைந்தெடுக்கும் இல் வாழ்க்கையில் நிலைத்திருப்பதும் காதல் தான்
கண் மூடி , அவள் தெரிய , முகம் மலர்ந்தால் மட்டும் காதல் அல்ல
வீட்டில் உதவி,பிள்ளை படிப்பு,ரேஷன் பயணமும் காதல் தான்
அடுக்கடுக்காய் வரிகள் சேர்த்து கவிகள் வரைவது காதல் அல்ல
வார்த்தையில் அடங்கா,வலியும்,சுகமும் அனைத்தும் சேர்ந்தது காதல்.
No comments:
Post a Comment